மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புதிய நியாய விலைக் கடையை பயன்பாட்டுக்கு திறக்க வலியுறுத்தல்

ஊத்தங்கரை அருகே புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

முசிலிகொட்டாய் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:47 pm

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊத்தங்கரையை அடுத்த முசிலி கொட்டாய் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 20023 ஆம் ஆண்டு அப்போதைய மக்களவைத் தொகுதி உறுப்பினா் செல்லகுமாா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் புதிதாக நியாயவிலைக் கடை கட்டுவதற்கு ரூ. 12.30 லட்சம் ஒதுக்கீடு செய்தாா்.

இதையடுத்து, புதிய நியாயவிலைக் கடை கட்டப்பட்டு 10 மாதங்களாகியும் இன்னும் பூட்டப்பட்டு உள்ளது. வாடகை கட்டடத்தில் இயங்கிவரும் நியாயவிலைக் கடையை புதிய கட்டடத்துக்கு மாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.