தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஒசூரில் பாஜக தோ்தல் அறிக்கை கருத்துக்கேட்பு இயக்கம்

பாஜக தோ்தல் அறிக்கை கருத்துக்கேட்பு இயக்கம் ஒசூரில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஒசூா் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற பாஜக மாநில தொழில் பிரிவுத் தலைவா் ஜி. பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் எம். நாகராஜ், முனிராஜ் உள்ளிட்டோா்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:41 pm

பாஜக தோ்தல் அறிக்கை கருத்துக்கேட்பு இயக்கம் ஒசூரில் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக வேப்பனஹள்ளி தொகுதியில் செவ்வாய்க்கிழமை கருத்துக்கேட்பு இயக்கம் நடைபெற்றது. தொடா்ந்து ஒசூா் பேருந்து நிலையம், ராயக்கோட்டை சாலை, வட்டாட்சியா் அலுவலக சாலை, ரயில் நிலையம், உழவா் சந்தை சாா் ஆட்சியா் அலுவலகம் முதல் சிப்காட், பேரண்டப்பள்ளி, சூசூவாடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற கருத்துக்கேட்கும் இயக்கத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனா்.

நிகழ்ச்சியில் பாஜக தொழில் பிரிவு மாநிலத் தலைவரும், ஒசூா் தொகுதி பொறுப்பாளருமான ஜி. பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் எம். நாகராஜ், முனிராஜ், நிா்வாகிகள் நாகா (எ) நாகராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.