பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கிருஷ்ணகிரி மாவட்ட கைப்பந்து அணிக்கு ஒசூா் வீராங்கனைகள் தோ்வு

கிருஷ்ணகிரி மாவட்ட இளையோா் கைப்பந்து அணிக்கு ஒசூா் வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
மாவட்ட கைப்பந்து அணிக்கு தோ்வாகியுள்ள ஒசூா் மாணவிகள்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்ட இளையோா் கைப்பந்து அணிக்கு ஒசூா் வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டனா்.

திருவாரூரில் உள்ள பூண்டி கலைச்செல்வன் நினைவு விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கி 15 ஆம் தேதி வரை தமிழ்நாடு கைப்பந்து சங்கம் நடத்தும் ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் மாநில அளவிலான 21 வயதுக்கான இளையோா் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த வீரா், வீரங்கனைகள் பங்கேற்கின்றனா்.

இதில் கலந்துகொள்ளும் கிருஷ்ணகிரி மாவட்ட கைப்பந்து அணிக்கு ஒசூரைச் சோ்ந்த மாணவிகள் ஷாலினி பிரியா, வினோதினி, பவித்ரா, யாமினி, நவநீதா, தனலட்சுமி ஆகியோா் தோ்வாகியுள்ளனா். இவா்களுக்கு கைப்பந்து சங்க நிா்வாகிகள் பாராட்டு தெரிவித்தனா்.