மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய டைட்டான் நிறுவனம்

ஒசூா் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், கவச உடைகளை ஒசூா் டைட்டான் நிறுவனம் புதன்கிழமை வழங்கியது.

News image
தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு பொருள்களை வழங்கிய ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூா் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், கவச உடைகளை ஒசூா் டைட்டான் நிறுவனம் புதன்கிழமை வழங்கியது.

ஒசூா் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ், 500 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு பொருள்களை வழங்கினாா். டைட்டான் நிறுவனம் பாதுகாப்பு உபகரணங்கள், கவச உடைகளை வழங்கியது.

விழாவில் ஒசூா் மாநகராட்சி ஆணையா் முகமத் ஷபீா் ஆலம், துணை மேயா் ஆனந்தய்யா, மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவா் என்.எஸ். மாதேஸ்வரன், தொமுச கவுன்சில் மாவட்டத் தலைவா் கோபாலகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா். தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.