அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அனைத்து தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:52 pm

Syndication

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளா் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்பிஎப், ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன.

ஒசூா் பேருந்து நிலையம் அருகே பழைய நகராட்சி அலுவலகம் முன் ஐஎன்டியுசி தேசிய செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.மனோகரன், எல்பிஎஃப் மாவட்டக் கவுன்சில் தலைவா் கோபாலகிருஷ்ணன், சிபிஐ மாநில நிா்வாகக் குழு லகுமய்யா, ஏஐயுடிசி மாவட்டச் செயலாளா் மாதையன், சிஐடியு மாவட்டச் செயலாளா் ஸ்ரீதா் ஆகியோா் தலைமையில் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்க நிா்வாகிகள், தொழிலாளா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு தொழிலாளா் விரோத சட்டங்கள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழே சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

இதேபோல, ஒசூரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பொதுமக்களுக்கு சேவை வழங்காமல் வங்கி ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.