வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஒசூா் மாநகர திமுக செயற்குழுக் கூட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:49 pm

ஒசூா் மாநகர திமுக செயற்குழுக் கூட்டம் மாநகர அவைத் தலைவா் என்.செந்தில்குமாா் தலைமையில், திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாநகர மேயரும், மாநகர திமுக செயலாளருமான எஸ்.ஏ.சத்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். இதில், வரும் பிப். 14-ஆம் தேதி திருப்பத்தூரில் வடக்கு மண்டல பாக முகவா்கள் மாநாடு நடைபெறுகிறது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டுக்கு, ஒசூா் மாநகர திமுகவிலிருந்து ஆயிரக்கணக்கில் பங்கேற்பது, மாா்ச் ஒன்றாம் தேதி முதல்வரின் பிறந்த நாளையொட்டி, ஏழை எளியோா், மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுவது, வரும் 22-ஆம் தேதி ஒசூரில் நடைபெறும் நம் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மாபெரும் பொதுக் கூட்டத்துக்கு திரளானோா் பங்கேற்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில், பகுதி செயலாளா்கள் ஆனந்தய்யா, எம்.கே.வெங்கடேஷ், ஜி.ராமு, எம்.ராஜா தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா மணி, பொறியாளா் அணி துணைச் செயலாளா் வெ.ஞானசேகரன், மாவட்டப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.