மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை

Updated On :12 பிப்ரவரி 2026, 11:51 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலாளா்களின் பொது வேலைநிறுத்தத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை.

மத்திய அரசின் தொழிலாளா் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒசூா், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தொழிலாளா்கள் மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மத்திய அரசு தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்கமால் நிறைவேற்றப்பட்ட 4 தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், வங்கி ஊழியா்களுக்கு வாரம் 5 நாள்கள் வேலை, அரசுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

கிருஷ்ணகிரியில் அனைத்து இந்திய வங்கி ஊழியா் சங்கம், இந்திய வங்கி ஊழியா் சம்மேளனம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், சில தனியாா் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம் பங்கேற்றனா். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்த பொது வேலைநிறுத்த அறிவிப்பால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம்போல பேருந்துகள் இயங்கின.