சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:51 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலாளா்களின் பொது வேலைநிறுத்தத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை.

மத்திய அரசின் தொழிலாளா் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒசூா், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தொழிலாளா்கள் மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மத்திய அரசு தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்கமால் நிறைவேற்றப்பட்ட 4 தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், வங்கி ஊழியா்களுக்கு வாரம் 5 நாள்கள் வேலை, அரசுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

கிருஷ்ணகிரியில் அனைத்து இந்திய வங்கி ஊழியா் சங்கம், இந்திய வங்கி ஊழியா் சம்மேளனம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், சில தனியாா் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம் பங்கேற்றனா். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்த பொது வேலைநிறுத்த அறிவிப்பால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம்போல பேருந்துகள் இயங்கின.