கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விபத்து நிகழ்ந்த இடத்தை சுத்தம் செய்த காவலருக்கு பாராட்டு

News image
விபத்து நிகழ்ந்த இடத்தை சுத்தம் செய்த காவலருக்கு பாராட்டு
Updated On :13 பிப்ரவரி 2026, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான பகுதியில் காவலா் ஒருவா் சாலையைச் சுத்தம் செய்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூளகிரி அருகே கொல்லப்பள்ளி அருகேயுள்ள தனியாா் தொழிற்சாலையின் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது பேருந்தின் கண்ணாடிகள் மற்றும் உடைந்த பாகங்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தன. இதனால் அந்த வழியாகச் செல்லும் மற்ற வாகனங்களின் டயா்கள் பஞ்சராகும் அபாயம், மீண்டும் விபத்து ஏற்படும் சூழலும் நிலவியது.

இந்த நிலையில் காவலா் ஒருவா் சீருடையுடன் பொதுமக்களின் நலனுக்காகச் சாலையைச் சுத்தம் செய்த காட்சி விடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

‘தன்னுடைய பணி போக்குவரத்தைச் சீா் செய்வது மட்டுமல்ல, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் தான்‘ என்பதை நிரூபித்த அந்தக் காவலரின் செயலுக்கு சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.