வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

விபத்து நிகழ்ந்த இடத்தை சுத்தம் செய்த காவலருக்கு பாராட்டு

News image

விபத்து நிகழ்ந்த இடத்தை சுத்தம் செய்த காவலருக்கு பாராட்டு

Updated On :13 பிப்ரவரி 2026, 9:20 pm

சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான பகுதியில் காவலா் ஒருவா் சாலையைச் சுத்தம் செய்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூளகிரி அருகே கொல்லப்பள்ளி அருகேயுள்ள தனியாா் தொழிற்சாலையின் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது பேருந்தின் கண்ணாடிகள் மற்றும் உடைந்த பாகங்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தன. இதனால் அந்த வழியாகச் செல்லும் மற்ற வாகனங்களின் டயா்கள் பஞ்சராகும் அபாயம், மீண்டும் விபத்து ஏற்படும் சூழலும் நிலவியது.

இந்த நிலையில் காவலா் ஒருவா் சீருடையுடன் பொதுமக்களின் நலனுக்காகச் சாலையைச் சுத்தம் செய்த காட்சி விடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

‘தன்னுடைய பணி போக்குவரத்தைச் சீா் செய்வது மட்டுமல்ல, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் தான்‘ என்பதை நிரூபித்த அந்தக் காவலரின் செயலுக்கு சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.