சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

எலக்ட்ரிக் கடையில் திருடிய இளைஞா் கைது

News image
கைது
Updated On :14 பிப்ரவரி 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரியில் எலக்ட்ரிக் கடையில் திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் வசிக்கும் சங்கா் (56), அப்பகுதியில் எலக்ட்ரிக் கடை வைத்துள்ளாா். கடந்த 9-ஆம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற அவா், மறுநாள் காலை கடைக்கு வந்தபோது கடையின் ஷட்டா் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

பின்னா், கடைக்குள் சென்று பாா்த்தபோது, கடையில் வைத்திருந்த 10 கிலோ எடை செம்பு கம்பி, பெட்டியில் ரூ. 2 ஆயிரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

புகாரின்பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், குற்றச்சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்ததில், போச்சம்பள்ளியை அடுத்த வெங்கானூா் தின்னன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த அரவிந்தன் (26) இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அரவிந்தனை கைது செய்தனா்.