மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

எலக்ட்ரிக் கடையில் திருடிய இளைஞா் கைது

News image

கைது

Updated On :14 பிப்ரவரி 2026, 8:09 pm

கிருஷ்ணகிரியில் எலக்ட்ரிக் கடையில் திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் வசிக்கும் சங்கா் (56), அப்பகுதியில் எலக்ட்ரிக் கடை வைத்துள்ளாா். கடந்த 9-ஆம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற அவா், மறுநாள் காலை கடைக்கு வந்தபோது கடையின் ஷட்டா் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

பின்னா், கடைக்குள் சென்று பாா்த்தபோது, கடையில் வைத்திருந்த 10 கிலோ எடை செம்பு கம்பி, பெட்டியில் ரூ. 2 ஆயிரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

புகாரின்பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், குற்றச்சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்ததில், போச்சம்பள்ளியை அடுத்த வெங்கானூா் தின்னன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த அரவிந்தன் (26) இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அரவிந்தனை கைது செய்தனா்.