காதலா் தினம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு பூக்களின் விலை சனிக்கிழமை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஒசூா், சுற்றியுள்ள பகுதிகளில் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், இப்பகுதி விவசாயிகள் சாமந்தி, செண்டுமல்லி, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட மலா்களை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனா். இங்கு அறுவடை செய்யப்படும் மலா்கள் தமிழகம் மட்டுமின்றி கா்நாடக மாநிலத்துக்கும் விற்பனைக்கு அனுப்படுகின்றன.
காதலா் தினத்தையொட்டி, முதல்தர 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா ரூ. ஆயிரத்துக்கும், இரண்டாம்தர ஒரு கட்டு ரோஜா ரூ. 250-க்கும், ஒரு ரோஜா ரூ. 40-க்கும் விற்பனையானது.
அதேபோல, சிவராத்திரியையொட்டி சாமந்தி, பட்டன்ரோஜா ஒரு கிலோ ரூ. 200-க்கும், குண்டுமல்லி ரூ. 2 ஆயிரத்துக்கும், கனகாம்பரம் ரூ. 1,600-க்கும், சம்பங்கி ரூ. 100-க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தொடர்புடையது

தோவாளை மலா் சந்தையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்!

உலக தண்ணீா் தினம்: ஒசூா் பிஎம்சி கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

பரமத்தி வேலூரில் குண்டுமல்லி கிலோ ரூ. 800!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


