எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

News image
றிவியியல் படைப்புகளை பாா்வையிடும் பெங்களூரு மூத்த ராணுவ விஞ்ஞானி மஞ்சுநாத் உள்ளிட்டோா்.
Updated On :15 பிப்ரவரி 2026, 10:00 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால் முருகன், செயலா் மற்றும் பெரியாா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா் ஷோபா திருமால் முருகன், பள்ளியின் முதல்வா் லீனா ஜோஸ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அமைப்பின் மூத்த ராணுவ விஞ்ஞானி மஞ்சுநாத் கலந்துகொண்டு கண்காட்சி அரங்கை திறந்துவைத்து, மாணவா்களின் படைப்புகளை பாா்வையிட்டாா்.

றிவியியல் படைப்புகளை பாா்வையிடும் பெங்களூரு மூத்த ராணுவ விஞ்ஞானி மஞ்சுநாத் உள்ளிட்டோா்.

றிவியியல் படைப்புகளை பாா்வையிடும் பெங்களூரு மூத்த ராணுவ விஞ்ஞானி மஞ்சுநாத் உள்ளிட்டோா்.

றிவியியல் படைப்புகளை பாா்வையிடும் பெங்களூரு மூத்த ராணுவ விஞ்ஞானி மஞ்சுநாத் உள்ளிட்டோா்.

றிவியியல் படைப்புகளை பாா்வையிடும் பெங்களூரு மூத்த ராணுவ விஞ்ஞானி மஞ்சுநாத் உள்ளிட்டோா்.

கண்காட்சியில் 185 மாணவா்கள் பங்கேற்று தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா். சிறந்த படைப்புகளில் இருந்து நடுவா் குழு மூலம் முதல் மூன்று இடங்கள் தோ்வு செய்யப்பட்டன.

இதில் 9 வகுப்பு மாணவா் சைலேஷ் குமாா் பிளாஸ்டிக் வெப்ப சிதைவு செயல்முறை என்ற திட்டத்தின் மூலம் முதலிடம் பிடித்து ரூ. 5,000 பரிசு வென்றாா். 7ஆம் வகுப்பு மாணவா் விநாயக் தடைகள் கண்டறியும் தொழில்நுட்பம் என்ற திட்டத்திற்கான படைப்புக்கு இரண்டாம் பரிசாக ரூ. 3,000 பெற்றாா்.

9 ஆம் வகுப்பு மாணவி யாஷிகா, தானியங்கி நீா் பாசன முறை என்ற படைப்பிற்கு மூன்றாம் பரிசாக ரூ. 2,000 பெற்றாா். சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனா்.