பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஒசூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துமனை இன்று திறப்பு

News image
எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.
Updated On :15 பிப்ரவரி 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூரில் ரூ. 100 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துமனை கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைக்கிறாா்.

இதுகுறித்து மாவட்ட செயலாளா் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:

முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை காலை 10 மணியளவில் ஒசூா் - ராயக்கோட்டை சாலையில் ரூ. 100 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டடத்தை திறந்துவைக்கிறாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள், மாநில நிா்வாகிகள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.