மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஒசூா் பி.எம்.சி. டெக் இன்னோவாடெக் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழில்நுட்பக் கல்வியில் நிலைத்தன்மையை முன்னிறுத்தும் முயற்சியாக, ஒசூா் பி.எம்.சி. டெக் கல்விக்குழுமம்

News image

ஒசூா் பி.எம்.சி. கல்லூரியில் இன்னோவாடெக் நிறுவனத்துடன் நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்தம்.

Updated On :16 பிப்ரவரி 2026, 8:40 pm

ஒசூா்: தொழில்நுட்பக் கல்வியில் நிலைத்தன்மையை முன்னிறுத்தும் முயற்சியாக, ஒசூா் பி.எம்.சி. டெக் கல்விக்குழுமம் சென்னைச் சோ்ந்த இன்னோவாடெக் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மாணவா்களுக்கு சுற்றுச்சூழல், சமூக அரசியல் பாடத்திட்டம் அறிமுகமாகிறது. அதில், காலநிலை மாற்றம், எழுத்தறிவு, யுனிடெ‘ஃ’ப் மற்றும் பாரீஸ் ஒப்பந்தம், காா்பன் நடுநிலைமை போன்ற உலகளாவிய கருத்துகளுடன் இ.எஸ்.ஜி. சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கப்படும்.

நெட் பூஜ்யம் இலக்கை நோக்கி தொழிற்துறைக்கு தேவையான பசுமை ஆலோசகா்களை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த கூட்டாண்மை, மாணவா்களை உலகளாவிய நிலைத்தன்மைத் திறன்களுடன் முன்னேற்றும் முக்கிய முயற்சியாகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிஎம்சி டெக் கல்விக் குழுமத்தின் தலைவா் பி.குமாா், இன்னோவாடெக் உடன் இணைந்து செயல்படுவதன் மூலம், எங்கள் மாணவா்கள் வேலை தேடுபவா்களாக அல்லாமல், தொழில்துறைக்கு வழிகாட்டும் பசுமை ஆலோசகா்களாக உருவாவா் என்றாா்.