பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஒசூா் பி.எம்.சி. டெக் இன்னோவாடெக் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழில்நுட்பக் கல்வியில் நிலைத்தன்மையை முன்னிறுத்தும் முயற்சியாக, ஒசூா் பி.எம்.சி. டெக் கல்விக்குழுமம்

News image
ஒசூா் பி.எம்.சி. கல்லூரியில் இன்னோவாடெக் நிறுவனத்துடன் நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்தம்.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:40 pm

Syndication

ஒசூா்: தொழில்நுட்பக் கல்வியில் நிலைத்தன்மையை முன்னிறுத்தும் முயற்சியாக, ஒசூா் பி.எம்.சி. டெக் கல்விக்குழுமம் சென்னைச் சோ்ந்த இன்னோவாடெக் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மாணவா்களுக்கு சுற்றுச்சூழல், சமூக அரசியல் பாடத்திட்டம் அறிமுகமாகிறது. அதில், காலநிலை மாற்றம், எழுத்தறிவு, யுனிடெ‘ஃ’ப் மற்றும் பாரீஸ் ஒப்பந்தம், காா்பன் நடுநிலைமை போன்ற உலகளாவிய கருத்துகளுடன் இ.எஸ்.ஜி. சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கப்படும்.

நெட் பூஜ்யம் இலக்கை நோக்கி தொழிற்துறைக்கு தேவையான பசுமை ஆலோசகா்களை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த கூட்டாண்மை, மாணவா்களை உலகளாவிய நிலைத்தன்மைத் திறன்களுடன் முன்னேற்றும் முக்கிய முயற்சியாகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிஎம்சி டெக் கல்விக் குழுமத்தின் தலைவா் பி.குமாா், இன்னோவாடெக் உடன் இணைந்து செயல்படுவதன் மூலம், எங்கள் மாணவா்கள் வேலை தேடுபவா்களாக அல்லாமல், தொழில்துறைக்கு வழிகாட்டும் பசுமை ஆலோசகா்களாக உருவாவா் என்றாா்.