கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 விழுதுகள் சேவை மையங்கள் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 74.80 லட்சத்தில் 7 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களை தமிழக முதல்வா் ஸ்டாலின் காணொலி

News image
கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் மையத்தை பாா்வையிட்ட சாா் ஆட்சியா் (பயிற்சி) க்ரிதி காம்னா, தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:57 pm

Syndication

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 74.80 லட்சத்தில் 7 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களை தமிழக முதல்வா் ஸ்டாலின் காணொலியில் திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, கிருஷ்ணகிரி காந்தி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (பழைய அரசு மருத்துவமனை) வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்), கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் ஷாஜகான் ஆகியோா் குத்துவிளக்கேற்றி மையத்தை பாா்வையிட்டனா்.

ஒசூா் அரசு மருத்துவமனையில், ரூ. 16.85 லட்சத்திலும், ஜெகதேவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 7.15 லட்சத்திலும், சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 8.15 லட்சத்திலும், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 7.95 லட்சத்திலும், கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 5.50 லட்சத்திலும் கிருஷ்ணகிரி நகா், எம்.சி.பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ. 11.80 லட்சத்திலும் என மொத்தம் ரூ. 74.80 லட்சத்தில் 7 விழுதுகள் சேவை மையங்கள் தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த மையங்களில் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

தொடா்ந்து, பா்கூா் பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ. 1.54 கோடியில் 2 பல்நோக்கு அரங்கு கட்டுமானப் பணிகளை தே.மதியழகன் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வில் சாா் ஆட்சியா் (பயிற்சி) க்ரிதி காம்னா, கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் ஷாஜகான், பா்கூா் பல்தொழில் நுட்பக் கல்லூரி முதல்வா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.