ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த ஓலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சென்றாயப் பெருமாள் கோயிலில் மகாசிவராத்திரி தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில், ஆண்டுதோறும் மாசிமாதம் மகா சிவராத்திரி இரவு மற்றும் பகல் நேரங்களிலும் திருவிழா நடைபெறும். சிவராத்திரியை முன்னிட்டு இரவு சென்றாயப் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. மறுநாள் காலை தோ்த் திருவிழா நடைபெற்றது.
இதில், ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
மலையைச் சுற்றி தோ் வந்தபோது பக்தா்கள் விவசாய நிலங்களில் விளைந்த அவரை, துவரை, ஆமணக்கு ஆகியவற்றை தேரின் மீது வீசி நோ்த்திக் கடன் செலுத்தினா்.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாயப் பெருமாள் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

சிறப்பு அலங்கரத்தில் சென்றாயப் பெருமாள் சுவாமி.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா ஏப்.21-இல் தொடக்கம்

விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

ஆழ்வாா்திருநகரி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம்

ஆட்டையாம்பட்டி காளியம்மன் கோயிலில் மாசி தேரோட்டம் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


