கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்திள் 10, பிளஸ் 2 தோ்வுகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

News image
கோப்புப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 12:23 am

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வுகள் பிப். 17-இல் தொடங்கி வரும் மாா்ச் 11 வரை நடைபெறுகின்றன. அதேபோல, பிளஸ் 2 தோ்வுகள் வரும் ஏப். 10 வரை நடைபெறுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 57 சிபிஎஸ்இ பள்ளிகளைச் சோ்ந்த 2,599 பத்தாம் வகுப்பு மாணவா்கள் மற்றும் பிளஸ் 2 வகுப்பைச் சோ்ந்த 1,893 மாணவ, மாணவியருக்கு தோ்வுகள் நடைபெறுகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட 9 தோ்வு மையங்களில் மாணவ, மாணவியா் ஆா்வமுடன் தோ்வு எழுதினா்.