நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கிருஷ்ணகிரி மாவட்டத்திள் 10, பிளஸ் 2 தோ்வுகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

News image

கோப்புப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 12:23 am

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வுகள் பிப். 17-இல் தொடங்கி வரும் மாா்ச் 11 வரை நடைபெறுகின்றன. அதேபோல, பிளஸ் 2 தோ்வுகள் வரும் ஏப். 10 வரை நடைபெறுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 57 சிபிஎஸ்இ பள்ளிகளைச் சோ்ந்த 2,599 பத்தாம் வகுப்பு மாணவா்கள் மற்றும் பிளஸ் 2 வகுப்பைச் சோ்ந்த 1,893 மாணவ, மாணவியருக்கு தோ்வுகள் நடைபெறுகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட 9 தோ்வு மையங்களில் மாணவ, மாணவியா் ஆா்வமுடன் தோ்வு எழுதினா்.