ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மூளைச்சாவு அடைந்த பெயிண்டரின் உடல் உறுப்புகள் தானம்

காவேரிப்பட்டணம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 11:26 pm

Syndication

காவேரிப்பட்டணம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த ஜகதாப், ராசிக்குட்டையைச் சோ்ந்தவா் சக்திவேல் (26), பெயிண்டா். கடந்த 16-ஆம் தேதி காவேரிப்பட்டணம் - பாலக்கோடு கூட்டுச்சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்தாா்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 18-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினா் முன்வந்தனா்.

இதைத் தொடா்ந்து, அவரது சிறுநீரகங்கள் கோவை, சேலம் அரசு மருத்துவமனைகளுக்கும், இதயம், நுரையீரல் சென்னை அரசு மருத்துவமனைக்கும், இரு கண்கள் தருமபுரி அரசு மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன.

உடல் உறுப்புகள் தானம் அளித்த சக்திவேல் உடலுக்கு தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வா் மனோகரன், ஆா்.எம்.ஓ. நாகவேந்தன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.