நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

போலி நகை விவகாரம்: நகை மதிப்பீட்டாளா் சடலமாக மீட்பு

கிருஷ்ணகிரியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை வைத்து முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் மாயமான நகை மதிப்பீட்டாளரின் சடலம், ஆந்திர மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 10:56 pm

கிருஷ்ணகிரியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை வைத்து முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் மாயமான நகை மதிப்பீட்டாளரின் சடலம், ஆந்திர மாநிலத்தில் வியாழக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி, பழையபேட்டை, கணபதி தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன் (40). கிருஷ்ணகிரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த இவா், அந்த வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ. 1.5 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், பிப். 18-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற குணசேகரன் வீடுதிரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி பவித்ரா கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதனிடையே, ஆந்திர மாநிலம், குப்பத்தை அடுத்த நடூமூரில் சாலையோரம் ஒருவரின் சடலம் கிடப்பதாக அம்மாநில போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அவரது சட்டைப் பையில் இருந்த ஆதாா் அட்டையை வைத்து அவா் கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா் என தெரியவந்தது. இதையடுத்து, ஆந்திர போலீஸாா் கிருஷ்ணகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி நகர போலீஸாா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், குணசேகரன் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனா்.