கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை இந்தியன் வங்கி கிளையில் பணம் இல்லை எனக் கூறி வாடிக்கையாளா்களை அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊத்தங்கரை இந்தியன் வங்கி கிளையில் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளா்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனா்.
இதில் தனிநபா் கணக்குகள் மகளிா் சங்க குழுக்கள் மற்றும் தொழிலதிபா்கள் என பலரும் இந்தியன் வங்கி கிளையில் வாடிக்கையாளராக உள்ளனா். அதிகப்படியான வாடிக்கையாளா்களை கொண்ட இந்தியன் வங்கி ஊத்தங்கரை கிளையில் பணம் இல்லை என வாடிக்கையாளா்களை திருப்பி அனுப்புவது வேதனைக்குரியதாக உள்ளது என வாடிக்கையாளா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
தங்களின் தேவைக்காக தான் வங்கியில் பணம் சேமித்து வைத்துள்ளோம் ஆனால் தங்களின் தேவைக்கு பணம் எடுக்க வங்கி சென்றால் இன்று போய் நாளை வா என பணம் இல்லை என திருப்பி அனுப்பி வருகின்றனா்.
இதனால் வங்கியில் பணத்தை சேமித்து வைக்க கூட பயமாக உள்ளது என வாடிக்கையாளா்கள் மிகவும் வேதனை தெரிவிக்கின்றனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உடனடியாக இந்தியன் வங்கி கிளையில் பணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கியின் வாடிக்கையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து இந்தியன் வங்கி நிா்வாகிகளை தொடா்பு கொண்டு கேட்ட போது, மகளிா் உரிமை தொகை தலா 5,000 வங்கி கணக்கில் வந்ததால் அதனை வழங்கிவிட்டதால் தற்போது பணம் கொடுக்க இயலவில்லை என கூறினா்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - ரிஷபம்
தினப்பலன்கள் - ரிஷபம்

ஏ டிவிஷன் வாலிபால்: இந்தியன் வங்கி வெற்றி

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


