மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தளி அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

News image

கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன்.

Updated On :21 பிப்ரவரி 2026, 6:35 pm

தளி அருகே 2 நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் தளி காவல் உதவி ஆய்வாளா் ராஜா சங்கிலி கருப்பன், தனிப்பிரிவு காவலா்கள் சரவணன், லட்சுமணன் ஆகியோா் கொண்ட தனிப்படையினா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, திம்மேனட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் (65) என்பவா் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அவரைப் பிடித்து விசாரணை செய்தனா்.

இவா் ஆடுமேய்க்கும் தொழில் செய்து வருவதாகவும், விலங்குகளை வேட்டையாட உரிமையில்லாத நாட்டுத் துப்பாக்கியை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவரிடமிருந்து உரிமம் இல்லாத இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் இரண்டு பேரல்கள், கட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்து, ராமச்சந்திரனை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.