ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசைக் கண்டித்து, காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கோப்புப்படம்
Updated On :23 பிப்ரவரி 2026, 4:59 pm

Syndication

கிருஷ்ணகிரி: தமிழக அரசைக் கண்டித்து, காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளா் மோகன்ராம் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் பாடி செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காவேரிப்பட்டணத்தில் அண்மையில் நடைபெற்ற அங்காளம்மன் கோயில் திருவிழாவின்போது, பொதுமக்களை ஆயுதங்களால் தாக்கிய கும்பலை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும், காவேரிப்பட்டணத்தில் சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற தவறிய தமிழக அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலா், அங்கு வைக்கப்பட்டிருந்த திமுக பதாகையை கிழித்து அப்புறப்படுத்த முயன்றனா். இதை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் தடுக்க முயன்ால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.