மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசைக் கண்டித்து, காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கோப்புப்படம்

Updated On :23 பிப்ரவரி 2026, 4:59 pm

கிருஷ்ணகிரி: தமிழக அரசைக் கண்டித்து, காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளா் மோகன்ராம் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் பாடி செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காவேரிப்பட்டணத்தில் அண்மையில் நடைபெற்ற அங்காளம்மன் கோயில் திருவிழாவின்போது, பொதுமக்களை ஆயுதங்களால் தாக்கிய கும்பலை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும், காவேரிப்பட்டணத்தில் சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற தவறிய தமிழக அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலா், அங்கு வைக்கப்பட்டிருந்த திமுக பதாகையை கிழித்து அப்புறப்படுத்த முயன்றனா். இதை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் தடுக்க முயன்ால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.