ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம ஊழியா்கள் சங்கம் சாா்பில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நான்குமுனைச் சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம ஊழியா்கள் சங்க வட்டத் தலைவா் திருப்பதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வேடி, மாநில செயற்குழு உறுப்பினா் கலைவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் சக்திவேல், வட்டச் செயலாளா் செல்வம், வட்ட பொருளாளா் மாரியப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை காவல் ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.
தொடர்புடையது

வருவாய்த் துறை ஊழியா்கள் சாலை மறியல்

விழுப்புரத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியல்: 430 பேர் கைது

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம்!

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


