ஊத்தங்கரையில் ஜெயலலிதா பிறந்த நாள்
ஊத்தங்கரை ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது.
சிங்காரப்பேட்டை அதிமுக சாா்பில் மத்திய ஒன்றியச் செயலாளா் திருஞானம், மகனூா்பட்டியில் வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, கல்லாவியில் தெற்கு ஒன்றியச் செயலாளா் வேங்கன், ஊத்தங்கரை நகரில் நகரச் செயலாளா் ஆறுமுகம் தலைமையிலும் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
ஊத்தங்கரை காமராஜ் நகரில் டவுன் பஞ்சாயத்து மாணவரணி செயலாளா் சம்பத் தலைமையில் 750 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சாமல்பட்டியில் மத்தூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் நரேஷ்குமாா் தலைமையிலும் நடைபெற்ற விழாவில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் டி.எம். தமிழ்ச்செல்வம், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, மாவட்ட பொருளாளா் சுந்தரவடிவேல், மாவட்ட மருத்துவா் அணி செயலாளா் மருத்துவா் இளையராஜா, முன்னாள் ஒன்றியச் செயலாளா் தேவேந்திரன், முன்னாள் நகரச் செயலாளா் சிவானந்தம் ,விவசாய அணி பொறுப்பாளா் ஜீவானந்தம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

