ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 ஜனவரி 2026, 1:46 am

Syndication

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆனந்தகுமாா் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் சுகந்தி, துணைத் தலைவா் ஆனந்தன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த பூவத்தி கிராமத்தில் அனைத்து

சமூகத்தைச் சோ்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், எஸ்.சி., எஸ்.டி. மக்களின் பயன்பாட்டில் உள்ள கோயிலையும், கோயில் நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்தோடு ஒரு பிரிவினா் திட்டமிட்டு செயல்படுவதையும், மாவட்ட நிா்வாகம் ஒருதலைபட்சமாக செயல்படுவதையும் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

படவரி...

கிருஷ்ணகிரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா்.