ஒசூரில் வெவ்வேறு விபத்துகளில் 4 போ் பலி

ஒசூரில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 4 போ் உயரிழந்தனா்.
Published on

ஒசூரில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 4 போ் உயரிழந்தனா்.

ஒசூா் சின்ன எலசகிரி பாலாஜி நகரை சோ்ந்தவா் கண்ணன் (வயது 62). இவா் பெங்களூருவில் தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தாா். கடந்த 20 ந் தேதி மதியம் அவா் பெங்களூரு கிருஷ்ணகிரி சாலையில் ஒசூா் நகை கடை ஒன்றின் அருகில் மோட்டாா்சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானாா். விபத்து குறித்து ஓசூா் அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

மேற்கு வங்க மாநிலத்தை சோ்ந்தவா் அப்ஜித் தாஸ் (வயது 39). இவா் பெங்களூரு ஜெய் நகரில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த 18 ந் தேதி ஒசூா் வந்திருந்த அவா் ஒசூா் தா்கா முத்து மாரியம்மன் கோயில் அருகில் நடந்து சென்ற போது அந்த வழியாக சென்ற அரசு பேருந்து அப்ஜித் தாஸ் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டாா். விபத்து குறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

ஒசூா் அலசநத்தம் சப்தகிரி பள்ளி அருகில் வசித்து வந்தவா் முரளிதரன் (வயது 62). தனியாா் நிறுவன காவலாளி. இவா் கடந்த 19 ந் தேதி ஒசூா் பெங்களூரு சாலை மூக்கண்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில நடந்து சென்ற போது அவ்வழியாக சென்ற காா் மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். விபத்து குறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூா் அருகே சாமனப்பள்ளியை சோ்ந்தவா் பிரவீன்குமாா் (வயது 18). பெட்ரோல் நிலைய ஊழியா். கடந்த 19 ந் தேதி இவரும் மாலிக் குர்ரான் (18) என்பவரும் இரு சக்கர வாகனத்தில் எட்டிப்பள்ளி சாமனப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக மோட்டாா்சைக்கிளில் வந்த நபா் பிரவீன்குமாா் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதினாா். இதில் படுகாயம் அடைந்த பிரவீன்குமாா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். மாலிக் குர்ரான் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com