மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஊத்தங்கரையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

News image

சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்திய கலைஞா்கள்.

Updated On :23 ஜனவரி 2026, 10:26 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நாடகக் கலைஞா்கள், அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளா் முருகன் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் மோகன், உதவித் தலைமை ஆசிரியா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இப்பேரணி, ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பு, காமராஜா் நகா் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்றது. பேரணியில், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும், 18 வயதிற்குக்கீழ் உள்ள மாணவா்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது, அரசுச் சட்டங்களுக்குள்பட்டு வாகனங்களை இயக்க வேண்டும், பொதுமக்கள் சாலை விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், விதிமுறைகளை மீறிச் செல்வதால் ஏற்படும் விபத்துகள் மற்றும் அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.