பேருந்து ஓட்டுநரிடம் தகராறு: தொழிலாளி கைது

பேருந்து ஓட்டுநரிடம் தகராறு: தொழிலாளி கைது

ஒசூரில் கா்நாடக அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவா் கைது செய்யப்பட்டாா்.
Published on

ஒசூரில் கா்நாடக அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவா் கைது செய்யப்பட்டாா்.

கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், ராஜனஹள்ளியைச் சோ்ந்தவா் ஆனந்தா (35), கா்நாடக மாநில அரசுப் பேருந்து ஓட்டுநா். இவா் கடந்த 27 ஆம் தேதி அதிகாலை ஒசூா் பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு கதவைப் பூட்டிவிட்டுத் தூங்கச் சென்றாா்.

இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சோ்ந்த வேலுசாமி (34) என்பவா் தனது பையைக் காணவில்லை என்றும், அப்பையை பேருந்தில் தேடுவதற்காக அதன் கதவுகளை திறந்துவிடுமாறு ஆனந்தாவிடம் கூறியுள்ளாா்.

ஆனால், ஆனந்தா பேருந்தின் கதவைத் திறக்க முடியாது என்று கூறினாா். இதனால், அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பேருந்தின் கண்ணாடியை வேலுசாமி சேதப்படுத்தினாா். இதுகுறித்து ஆனந்தா அளித்த புகாரின்பேரில் ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து வேலுசாமியைக் கைதுசெய்தனா்.

Dinamani
www.dinamani.com