திறப்பு விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாயப் பிரிவு தலைவா் பவன்குமாா், மாநிலச் செயலாளா் முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா்.
திறப்பு விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாயப் பிரிவு தலைவா் பவன்குமாா், மாநிலச் செயலாளா் முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா்.

மிட்டஅள்ளியில் தேங்காய் கொள்முதல் நிலையம் திறப்பு

காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்டஅள்ளியில் தனியாா் தேங்காய் கொள்முதல் நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
Published on

காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்டஅள்ளியில் தனியாா் தேங்காய் கொள்முதல் நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளி கிராமத்தில், தியாகி லோகநாதனின் நினைவாக தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேங்காய் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கொள்முதல் நிலையத்தை காங். கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் பவன்குமாா் திறந்துவைத்தாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் விவசாயம் சாா்ந்த மாவட்டமாகும். இங்கு தேங்காய் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

இந்நிகழ்வில், மாநிலச் செயலாளா் முரளி, திருப்பத்தூா் மாவட்ட முன்னாள் தலைவா் பிரபு, அகில இந்திய காங். கமிட்டி முன்னாள் உறுப்பினா் முத்து, முன்னாள் எம்எல்ஏ சமரசம், காங். கட்சி விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com