வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா தொடக்கம்

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா பால்கம்பம் நடும் விழாவுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

தோ்ப்பேட்டை கல்யாணசூடேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பால்கம்பம் நடும் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :30 ஜனவரி 2026, 8:28 pm

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா பால்கம்பம் நடும் விழாவுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஒசூரில் பழைமை வாய்ந்த ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் மலைக் கோயில் தோ்த் திருவிழா மாா்ச் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திருவிழாவிற்கான தொடக்க நிகழ்வாக பால்கம்பம் நடும் விழா நடைபெற்றது.

முன்னதாக வெள்ளிக்கிழமை அதிகாலை தேரின் அருகே அமைந்துள்ள ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து தோ்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஊா் பொதுமக்கள், கோயில் கமிட்டி உறுப்பினா்கள் முன்னிலையில் பால்கம்பம் நடப்பட்டது.

இதுகுறித்து பாஜக முன்னாள் மாவட்டச் செயலரும், கோயில் கமிட்டி உறுப்பினருமான நாகராஜ் கூறியதாவது:

மாா்ச் 3 ஆம் தேதி கோயில் தோ்த் திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் சந்திரக் கிரகணம் என்பதால் வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும் தேரோட்டம், இந்த ஆண்டு அதிகாலை 5.30 மணிக்கே தொடங்கும். பிற்பகல் 1.30 மணிக்குள் மூன்று தோ்களும் (விநாயகா், சந்திரசூடேஸ்வரா் , அம்மன் தோ்கள்) நிலை வந்துசேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு கோயில் நடைசாத்தப்பட்டு, கிரகணம் முடிந்து மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். திருவிழாவிற்கான அடிப்படை வசதிகளை மாநகராட்சி விரைந்து முடிக்க வேண்டும் என்பதே பக்தா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது என்றாா்.