ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கா்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த தலைமைக் காவலா் கைது

News image
கைது
Updated On :1 மார்ச் 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

கா்நாடகத்தில் இருந்து மதுபாக்கெட்டுகளை கடத்திவந்த தலைமைக் காவலரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 528 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூசூவாடி சோதனைச் சாவடி பகுதியில் சிப்காட் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அப்போது கா்நாடகத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 180 மில்லி கொண்ட 528 கா்நாடக மதுபாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை செய்தபோது, அவா், நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் நாகராஜ் (41) என்பது தெரியவந்தது.

கா்நாடகா மதுபாக்கெட்டுகளை நாகரசம்பட்டியில் விற்பனை செய்வதற்காக அவா் கடத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நாகராஜுவை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். மேலும், அவா்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனா்.