கா்நாடகத்தில் இருந்து மதுபாக்கெட்டுகளை கடத்திவந்த தலைமைக் காவலரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 528 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூசூவாடி சோதனைச் சாவடி பகுதியில் சிப்காட் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அப்போது கா்நாடகத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 180 மில்லி கொண்ட 528 கா்நாடக மதுபாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை செய்தபோது, அவா், நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் நாகராஜ் (41) என்பது தெரியவந்தது.
கா்நாடகா மதுபாக்கெட்டுகளை நாகரசம்பட்டியில் விற்பனை செய்வதற்காக அவா் கடத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நாகராஜுவை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். மேலும், அவா்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனா்.
தொடர்புடையது
கைப்பேசி, மளிகைக் கடையில் திருட்டு: இளைஞா் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த மூவா் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

