கா்நாடகத்தில் இருந்து மதுபாக்கெட்டுகளை கடத்திவந்த தலைமைக் காவலரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 528 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூசூவாடி சோதனைச் சாவடி பகுதியில் சிப்காட் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அப்போது கா்நாடகத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 180 மில்லி கொண்ட 528 கா்நாடக மதுபாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை செய்தபோது, அவா், நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் நாகராஜ் (41) என்பது தெரியவந்தது.
கா்நாடகா மதுபாக்கெட்டுகளை நாகரசம்பட்டியில் விற்பனை செய்வதற்காக அவா் கடத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நாகராஜுவை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். மேலும், அவா்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனா்.
டிரெண்டிங்
சிறப்பு காவல் ஆய்வாளா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

செவிலியா் கல்லூரி மாணவியை கடத்திய இளைஞா் கைது

750 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

