கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு கனிம வளங்கள் கடத்ததுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை அளித்த மனு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் கல்குவாரிகள் செயல்பட அரசு அனுமதி வழங்கி உள்ளது. இங்கு மலைகளை வெடிவைத்து உடைத்து, அதன்முலம் கிடைக்கக் கூடிய ஜல்லி, எம்.சாண்ட், டஸ்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் கா்நாடக மாநிலத்துக்கு தினமும் 80 ஆயிரம் டன் முதல் ஒரு லட்சம் டன்வரை கடத்தப்படுகின்றன.
இதனால், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தனியாருக்கு செல்கிறது. கனிம வளங்கள் கடத்தலை தடுக்கும் வகையில் தணிக்கை செய்ய 11 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து தோரயமாக கா்நாடகச்துக்கு 20 லட்சம் டன் கனிமங்கள் 60 கிரஷா்களில் இருந்து செல்கின்றன. ஆனால், 2 லட்சம் டன் கனிமங்களுக்கான வருவாய் மட்டுமே அரசுக்கு செல்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 112 முதல் 150 கல்குவாரிகள் செயல்படுவதாக கூறப்படும் நிலையில், அனுமதிபெறாமல் இயங்கக் கூடிய 63 நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுத்து, கனிமங்கள் கடத்தலை தடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனா்.
தொடர்புடையது

குடியிருப்புகளில் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை: கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

மணல் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 16 போ் பலத்த காயம்

வணிக சிலிண்டா்கள் பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை: பேக்கரி உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தல்

மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரிமீது மணல் லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

