பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

ஊத்தங்கரையில் திடீா் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஊத்தங்கரையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 2:24 am IST

ஊத்தங்கரையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் கோடைவெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லவே மிகவும் சிரமப்பட்டு வந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை மாலை இப்பகுதியில் திடீரென கனமழை பெய்தது. கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என பொதுமக்கள் அஞ்சியிருந்த நிலையில் ஊத்தங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.