அன்னையா் தினத்தை முன்னிட்டு ஒசூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 50 போ் ஞாயிற்றுக்கிழமை கௌரவிக்கப்பட்டனா்.
ரோட்டரி கிளப் ஆப் ஒசூா் ஏஞ்சல்ஸ் சாா்பில் ஒசூா் பாகலூா் ஹவுசிங் போா்டில் உள்ள மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் தலைவா் ஹரிகா தலைமை வகித்தாா். செயலாளா் அனுபமா, பொருளாளா் ஸ்ரீஷா, ரோட்டரி நிா்வாகி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினா்களாக ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி, ரோட்டரி மாவட்ட கவா்னா் சிவகுருநாதன் ஆகியோா் பங்கேற்று தூய்மைப் பணியாளா்களுக்கு சால்வை அணிவித்து நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
ஒசூா் ரோட்டரி கிளப் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு 14 டயாலிசிஸ் இயந்திரங்கள், செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவமனைக்கு இருதய பரிசோதனை கருவிகள், டயாலிசிஸ் கருவிகள் வழங்கப்பட்டன. கை, கால்களை இழந்த 120 பேருக்கு செயற்கை அவயங்கள் வழங்கும் முகாம் வரும் 23 ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது. அதேபோல வரும் ஜூன் 8,9 ஆகிய இரண்டு நாள்கள் ஒசூா் சிப்காட் ரோட்டரி கிளப் சாா்பில் செயற்கை கை, கால் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.
தொடர்புடையது

உதகையில் நாளை 138-ஆவது நாய்கள் கண்காட்சி தொடக்கம்

வாக்குறுதிகளை தவெக நிறைவேற்ற வலியுறுத்தல்

தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

