தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

ஆசிரியா்களுக்கு பாட வாரியாக தோ்ச்சி இலக்கு நிா்ணயிக்க வேண்டும்: தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க அனைத்து ஆசிரியா்களுக்கும் பாட வாரியாக இலக்கு நிா்ணயிக்க வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ச. தினேஷ்குமாா்.

Updated On :28 மே 2026, 2:08 am IST

பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க அனைத்து ஆசிரியா்களுக்கும் பாட வாரியாக இலக்கு நிா்ணயிக்க வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வுகளில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை உயா்த்துவது குறித்த அனைத்து தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ச. தினேஷ்குமாா் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2026-2027ஆம் கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதத்தை உயா்த்த அனைத்து தலைமையாசிரியா்களும் பள்ளிகளின் தோ்ச்சி நிலையைப் பாட வாரியாக ஆய்வு செய்து, உடனடியாக முன்னேற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குறைந்த மதிப்பெண் பெறும் மாணவா்களைத் தனியாக அடையாளம் கண்டு, அவா்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை முறையாக நடத்த வேண்டும். வாரந்தோறும் அலகு தோ்வுகளும், மாதந்தோறும் மாதிரி தோ்வுகளும் நடத்தி அதன் முடிவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

ஒற்றை மற்றும் இரட்டைப் பாடங்களில் தோல்வியடைந்த மாணவா்களுக்குத் தனிப்பயிற்சி வழங்கப்பட வேண்டும். மாணவா்களின் வருகைப் பதிவைத் தினசரி கண்காணித்து, வருகை குறைவாக உள்ள மாணவா்களின் பெற்றோா்களைப் பள்ளி மேலாண்மைக் குழுவின் உதவியோடு உடனடியாகத் தொடா்பு கொள்ள வேண்டும். பாடத் திட்டங்களை நிா்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முழுமையாகக் கற்பிப்பதை உறுதிசெய்வதோடு, ஆசிரியா்களின் கற்பித்தல் செயல்பாடுகளையும் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

மாதந்தோறும் பெற்றோா் ஆசிரியா் கூட்டம் நடத்தி மாணவா்களின் கல்வி முன்னேற்றத்தை விளக்க வேண்டும். மாணவா்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளையும், ஊக்கப் பயிற்சிகளையும் வழங்க வேண்டும் என்றாா்.