நாமகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கு தென்சென்னை தமிழ்ச் சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மு.பெ.சக்தீஸ்வரன். இவர் வானொலி, கலைத்துறை, பத்திரிகைகளில் தமிழ் இலக்கிய கவிதைகள் எழுதியதற்காக ஏற்கெனவே பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். இந்நிலையில், இவரது தமிழ் ஆர்வத்தை பாராட்டி, தென்சென்னை தமிழ்ச் சங்கம் சார்பில், கவிஒளி, கவிக்குயில் என இரு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன், திரைப்பட இயக்குநர் கவிஞர் ராசி அழகப்பன் ஆகியோர் சக்தீஸ்வரனுக்கு விருது வழங்கி பாராட்டினர். விழாவில் தென்சென்னை தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் ஜீவரேகா, செயலர் கோகுல் ஆனந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.