ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் உள்ள ஆலயத்தில், ஸ்ரீவித்யா விநாயகர், ஸ்ரீவித்யா சரஸ்வதி, ஸ்ரீலட்சுமி ஹயக்கீரீவர் ஆகிய தெய்வங்களுக்கு நான்காம் ஆண்டு ஸம்வஸ்ரா அபிஷேக விழா அண்மையில் நடைபெற்றது.
தமிழ் கலாசாரப் பண்பாட்டை மாணவர்கள் அறியவும், பக்தி நெறியை வளர்க்கும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர் மங்கைநடராஜன் குத்துவிளக்கேற்றினார்.
இதைத் தொடர்ந்து, கல்வி தழைக்கவும், மாணவச் செல்வங்கள் நலமுடன் செழிக்கவும் சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றன. கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (நிர்வாகம்) கே.கே.ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.