வளையப்பட்டி
துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக, வளையப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை18) காலை 9 முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நாமக்கல் மின்வாரியச் செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் தெரிவித்துள்ளார்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர் மற்றும் அவற்றின் சுற்றுப்புறப் பகுதிகள்.
நல்லூர்
மின்சாதனப் பராமரிப்புப் பணி காரணமாக, நல்லூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் முற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியச் செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள். நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், இராமதேவம், நடந்தை, பில்லூர், அர்த்தனாரிபாளையம், திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், குன்னமலை, கவுண்டிபாளையம் மற்றும் அவற்றின் சுற்றுப்புறப் பகுதிகள்.