பரமத்தி வேலூர் அருகே அரசு அனுமதியின்றி மணல் எடுத்து வந்த லாரி மற்றும் மணல் எடுப்பதற்கு பயன்படுத்திய ஜேசிபி வாகனத்தை பரமத்தி வேலூர் போலீஸார் பறிமுதல் செய்து, மணல் லாரி ஓட்டுநரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஜேசிபி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
பரமத்தி வேலூர் அருகே உள்ள அணிச்சம்பாளையம் காவிரியாற்றில், அரசு அனுமதியின்றி மணல் திருடப்பட்டு வருவதாக பரமத்தி வேலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸார் மணல் எடுத்து வந்த லாரியைப் பறிமுதல் செய்து, லாரியை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், மூலிமங்கலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணியை (29) கைது செய்தனர். மேலும் மணல் எடுப்பதற்கு பயன்படுத்திய ஜேசிபி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ஜேசிபி ஓட்டுநர் வினோத்தை தேடி வருகின்றனர்.