அணிச்சம்பாளையத்தில் வீட்டருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் சாராயத்தை மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
அணிச்சம்பாளையம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி (45). இவர் தனது வீட்டருகே சாராயத்தைப் பதுக்கி வைத்திருந்ததாக திருச்செங்கோடு மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் பன்னீர்செல்வம், பரமத்தி வேலூர் போலீஸார் நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பழனிசாமி தனது வீட்டருகே முள்புதரில் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள 20 லிட்டர் சாராயத்தைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராயத்தைப் பறிமுதல் செய்த போலீஸார் பழனிசாமியை கைது செய்தனர்.