எஸ்எஸ்எல்சி தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3,271 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் நாமக்கல் மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மொத்தம் 4,904 பேர் வெவ்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதன்படி தமிழ் பாடத்தில் 11 பேர், கணித பாடத்தில் 650 பேர், அறிவியல் பாடத்தில் 972 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 3,271 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.