நாமக்கல்லில் மதுவிலக்கு அமலாக்கத் துறை சார்பில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வரும் 27-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மதுவிலக்கு காவல் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பிடிபட்ட இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் வரும் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல்-திருச்சி சாலை, ஆண்டவர் பங்க் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நாமக்கல் மதுவிலக்கு காவல் பிரிவு அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் உரிய முன்வைப்பு தொகையை செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம்.