"திருச்செங்கோட்டில் சுற்றுவட்ட பாதை அமைக்க வேண்டும்'

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகர 6-வது மாநாடு சனிக்கிழமை சூரியம்பாளையத்தில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகர 6-வது மாநாடு சனிக்கிழமை சூரியம்பாளையத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டை சிபிஎம் மூத்த தலைவர் சேஷாசலம் கொடியேற்றி தொடங்கி வைத்தார். சீனிவாசன், மாவட்டச் செயலாளர் ரங்கசாமி மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார்.
மாநாட்டில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆதிநாராயணன், ஒன்றியச் செயலாளர் வேலாயுதம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள் விவரம்:
திருச்செங்கோட்டில் போக்குவரத்து நெரிசலைஓஈ கட்டுப்படுத்த ரிங் ரோடு அமைக்க வேண்டும், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், நலவாரிய அலுவலகம் திருச்செங்கோட்டில் அமைக்க வேண்டும், திருச்செங்கோட்டில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் 9 பேர் கொண்ட நகரக் குழு அமைக்கப்பட்டு புதிய நகரச்  செயலாளராக ராயப்பன் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com