நாமகிரிப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ. 10 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விரலி, உருண்டை, பனங்காளி ரக மஞ்சள் ஏலம் நடைபெறும். இதில் சுற்று வட்டாரப் பகுதி மஞ்சள் விவசாயிகள், வியாபாரிகள் மஞ்சளை ஏலத்துக்குக் கொண்டு வந்து பங்கேற்பர்.
நிகழ் வாரம் நடைபெற்ற ஏலத்தில் விரலி ரகம் 170 மூட்டைகள், உருண்டை ரகம் 60 மூட்டைகள், பனங்காலி ரகம் 5 மூட்டைகள் என மொத்தம் 235 மூட்டைகள் ஏலத்துக்குக் கொண்டு வரப்பட்டன. இதில், விரலி ரகம் குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ. 6 ஆயிரத்து 405-க்கும், அதிகபட்சமாக ரூ. 8 ஆயிரத்து 387-க்கும் விற்பனையானது. உருண்டை ரகம் ரூ. 5 ஆயிரத்து 645 முதல் அதிக பட்சமாக ரூ. 6 ஆயிரத்து 829-க்கும் தரத்துக்கேற்றவாறு விற்பனையானது. பனங்காலி ரகம் குறைந்த பட்சமாக ரூ. 8 ஆயிரத்து 122-க்கும், அதிகபட்சமாக ரூ. 9ஆயிரத்து 122-க்கும் விற்பனையானது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்று ஏலம் எடுத்தனர்.