நாமக்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீதான தாக்குதலைக் கண்டித்தும், பெரியாரை பற்றி அவதூறாகப் பேசிய பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலர் ஆர்.வேலாயுதம், நகரச் செயலர் ஐ.ராயப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஆதிநாராயணன், சு.சுரேஷ் , அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் எஸ்.சேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.