புதுச்சத்திரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்புதுச்சத்திரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமைநடைபெற்றது.

மத்திய அரசைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை
நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மாவட்டத் தலைவர்கள் சுப்பிரமணியன், பாச்சல் சீனிவாசன், புதுச்சத்திரம் வட்டாரத் தலைவர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எம். ஷேக்நவீத் தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசியது:
மீனவர் நலனில் அக்கரை இருப்பதாக கூறிக் கொண்டு மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்பதாக வாக்குறுதி அளித்த மத்திய அரசு, அதனை இதுவரை நிறைவேற்றவில்லை.
சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசலுக்கான கச்சா எண்ணெய் மிகவும் குறைந்திருக்கும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டே வருகிறது. இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்து சாமானிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மத்திய அரசின் நிர்வாக சீர்கேடுகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாண்டியன், சித்திக், குமரன், நகரத் தலைவர்கள் மோகன், முரளி, நாமகிரிப்பேட்டை வட்டாரத் தலைவர் இருசப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com