நாமக்கல் பொம்மைக்குட்டைமேடு காமராஜர் கல்வி நிறுவனங்களில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்த தினம் மாணவர்கள் தினமாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
அதையொட்டி அப்துல்கலாம் உருவ ஓவியம் திறக்கப்பட்டு, அதற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.நல்லதம்பி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கலாம் வாழ்க்கை வரலாறு தொடர்பான கண்காட்சி, அவர் லட்சியங்களை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் செயலர் சதாசிவம் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மோகனப்பிரியா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.