நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஸ்ரீநாராயணப் பெருமாள் கோயிலில் கருட பஞ்சமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
பின்னர் ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீகருடாழ்வார் சுவாமிகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. முன்னதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலிலிருந்து வரப்பெற்ற மாலை, ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சியான செண்டை மேளம் இசைக்க, இளைஞர்கள் முக்கிய வீதிகள் வழியாக நடனமாடி ஊர்வலமாக வந்தனர்.