குழாய் உடைப்பால் வீணாகும் காவிரி குடிநீர்

ராசிபுரம் நகருக்கு குடிநீர் வழங்கும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், காவிரி குடிநீர் வீணாகிறது.

ராசிபுரம் நகருக்கு குடிநீர் வழங்கும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், காவிரி குடிநீர் வீணாகிறது.
 ராசிபுரம் நகருக்கு எடப்பாடி கோனேரிப்பட்டி காவிரி ஆற்றுப் பகுதியில் இருந்து குழாய் மூலம் காவிரி குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில், ராசிபுரம் அருகேயுள்ள முத்துக்காளிப்பட்டி பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் வீணாகி சாலையிலும், விளைநிலங்களிலும் வழிந்தோடியது(படம்). இதனையடுத்து அப்பகுதியினர் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததன் பேரில், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், நகராட்சி குடிநீர் வழங்கல் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com