ராசிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி கல்வி மாவட்டம் உருவாக்கக் கோரிக்கை

ராசிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

ராசிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
 தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நாமக்கல் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மலர்க்கண்ணன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் மாநிலத் தலைவர் இளங்கோவன், மாநில மகளிர் அணி செயலாளர் சுபத்ரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு பேசினர். 
 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7ஆவது ஊதியக் குழுவின்படி வழங்கப்பட வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவர்களுக்கு உள்ளது போல் ஆசிரியர்களுக்கும் தனியாகப் பணிப்  பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். 
 பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருபால் ஆசிரியர்கள் மீது பொய் புகார்களை அளிக்கும் நபர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ராசிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும்.
 மாவட்ட செயலர் கண்ணன், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் லோகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com