பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ரூ.27.50 லட்சத்துக்கான பணிகளுக்கான பூமி பூஜையும், பணிகள் தொடக்கமும் சனிக்கிழமை நடைபெற்றது.
கொன்னையாரில் பால் கொள்முதல் நிலையம் அமைக்க ரூ. 9.5லட்சமும், மருக்கலாம்ப்பட்டியில் ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ. 4.5 லட்சமும், அக்கலாம்பட்டியில் சாலை அமைக்க ரூ.5.5லட்சமும், தொண்டிப்பட்டியில் சாலை அமைக்கரூ. 2.5லட்சமும், தொண்டிப்பட்டிபுதூரில் சாலை அமைக்கரூ. 5.5 லட்சமும் நிதி ஒதுக்கிய பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, அதற்கான பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர்.எம்.தங்கவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.செழியன், ராமசாமி, செல்வம், துரைசாமி, தங்கபிரகாஷ் புத்தூர் ராஜ், ராஜா கலந்து கொண்டனர்.